×

ஆந்திராவில் சொத்துக்காக கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த மனைவி கைது!: போலீசார் நடவடிக்கை

அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சொத்துக்காக தாயுடன் சேர்ந்து மனைவியே கணவரை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் நத்தம்பள்ளியை சேர்ந்த கோபிநாத் என்பவரே கொலை செய்யப்பட்டவர். கால் டாக்சி ஓட்டுனரான இவர், சுனிதா என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லாமல் இருந்த கோபிநாத், மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும், அனைத்து சொத்துக்களையும் விற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோபிநாத்துக்கும் அவருடைய மனைவி சுனிதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு முற்ற, தாயுடன் இணைந்து சுனிதா கோபிநாத்தை கொள்ள திட்டமிட்டு, கிரிக்கெட் மட்டையால் அவரை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, கோபிநாத் கொலை குறித்து சந்தேகமடைந்த அவரது சகோதரி சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுனிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,Andhra Pradesh , Wife ,husband , cricket bat ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்